அரசியலில் எனது ஆதரவு எப்போதும் என் தந்தை கமலஹாசனுக்கு தான் என்று நடிகை ஸ்ருதிகாசன் தெரிவித்துள்ளார்.
செம்மனூர் இன்டர்நேஷனல் ஜுவல்லர்ஸ் இன் 46வது கிளையை மதுரையில் நகைக்கடை நிறுவனர் பாபிசிம்நூர் மற்றும் திரைப்பட நடிகை சுருதிஹாசன், அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
பின்னர் உலக அமைதிக்காக 812 கிலோமீட்டர் ஓடிய பாபி சிம்மநூரின் சாதனையை மையமாக வைத்து எழுதப்பட்ட USEFULL USELESS என்ற புத்தகத்தை நடிகை சுருதிஹாசன் வெளியிட்டார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை ஸ்ருதிஹாசன், அரசியலை பொறுத்தவரை தனது தந்தைக்கு எப்போதும் ஆதரவு உண்டு என்றும், நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் அவர் கூறினார்.