Categories
உலக செய்திகள்

தொடர் கனமழை…. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளனத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் பேருந்து ஒன்று 30 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு மலை பாதையில் தொழிற்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும்  20 பேர் படுக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இதனை அடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |