Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாகனம், சிலிண்டருக்கு மாலை… பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு… காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன போராட்டம் நடத்தினார்கள். வட்டார காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் யு.எ.ராமராஜ், மாவட்ட பொது செயலாளர் எஸ்.விவேகானந்தன், மாவட்ட பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

மேலும் அம்மாபேட்டை நகர செயலாளர் அப்துல் அஜீஸ், ஜெய சந்திரன், குணசேகரன், சென் புவனேஸ்வர், ராஜி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார்கள். இதைப்போல் அந்தியூர் பகுதியில் பட்லூர் காங்கிரஸ் அலுவலகம் அருகில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மாவட்ட முன்னாள் தலைவர் பி.எஸ். எஸ். சச்சிதானந்தம் தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு மாநில முன்னாள் செயலாளர் சேது வெங்கட்ராமன், அம்மாபேட்டை வட்டார விவசாய தலைவர் பிரகாஷ், வட்டார முன்னாள் தலைவர் அருளானந்தம், இளைஞரணி தலைவர் சேட், மகளிர் தலைவி மேரி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தில் இரு சக்கர வாகனங்கள், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

மேலும் இதே போன்று டி. என். பாளையம் அண்ணா சாலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக போராட்டம் நடத்தினார்கள். கட்சியின் வட்டார தலைவர் பழனிசாமி தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் திரவியம் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |