Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை…. இளம்பெண்ணின் விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு கீர்த்தனா(27) என்ற மனைவியும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கீர்த்தன உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |