நியூ கலிடோனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள பிரான்சின் நாட்டில் நியூ கலிடோனியா என்ற தீவு அமைந்துள்ளது. இந்தத் தீவில் நேற்று அதிகாலையில் அந்நாட்டு நேரப்படி 2.27 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இதனால் பிஜி மற்றும் கலிடோனியாவில் கடற்கரையில் அலை மட்டத்திற்கு மேல் 3 மீட்டருக்கு குறைவான அலைகள் எழும்ப வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் மேலும் தென்கிழக்கே 279 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.