ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டம் துர்க்வாங்கம் எனும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதன்பின் அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். அவ்வாறு பலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் துப்பாக்கிசூடு நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்புபடையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.