கடந்த 26ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் தொடங்கியது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது.
இந்த நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 6 பந்துகளில் ஒரு சிக்சர் உட்பட 16 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் தோனி அனைத்து விதமான டி20 போட்டிகளில் சேர்த்து 7 ஆயிரம் ரன்களை கடந்து, இந்த சாதனை படைக்கும் 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.