மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா கட்டுப்பாடுகளையும் இன்றுடன் விலக்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா உட்பட வட மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்றுடன் முழுமையாக தளர்த்தப்படுகின்றன. இதையடுத்து முகக்கவசம் அணிவது மற்றும் கைகளை சுத்தம் செய்வது மட்டும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது.
எனவே 184 கோடி டோஸ், கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தப்பட்டு, நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி இயக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே கடந்த 24 மாதங்களில் தொடர்ந்து, கொரோனா சிகிச்சை, கண்காணிப்பு, ஆய்வு மற்றும் தடுப்பூசி என பல கட்டங்களாக கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நோய் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.