அ.தி.மு.க பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாறைக்குளம் கிராமத்தில் அ.தி.மு.க பிரமுகரான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாறைக்குளம் கிராமத்தில் வசிக்கும் செல்வகுமார் என்பவர் முன்விரோதம் காரணமாக சத்தியமூர்த்தியை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செல்வகுமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.