பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்காபுரத்தில் ஜெயராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஆலையில் கண்ணன் என்பவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார், இந்நிலையில் ஜெயராணி தனது மகன் வைரமணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கண்ணன் அவர்களை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.
மேலும் கண்ணன் ஜெயராணிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.