Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு…. சகோதரனின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

சொத்து தகராறில் தம்பி அக்காவை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி மைக்கேலை விட்டு பிரிந்து சகோதரனான தனக்கோடி என்பவரது வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் அக்கா தம்பி இருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட போது கோபத்தில் தனகோடி அரிவாளால் தனது அக்காவையும், அவரது குழந்தையையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த தனலட்சுமி மற்றும் குழந்தையை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தனலட்சுமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனகோடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |