Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தனியாக இருந்த பெண்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலிபாக்கம் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராதிகா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த ராதிகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராதிகாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராதிகா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |