செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் என்ற மகன் உள்ளார். இவர் திருச்செந்தூர் மேல மாடவீதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் சரவணன் வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது கடையின் ஷட்டர் உடைந்து கிடந்ததை கண்டு சரவணன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது 2 புதிய செல்போன் மற்றும் பழுது பார்க்க வந்த 8 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சரவணன் திருச்செந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.