Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் கண்டிப்பா போடணும்…. போக்குவரத்துத்துறை சார்பில்…. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு….

போக்குவரத்து துறை சார்பில் வாகனஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி குமாரபாளையம் வட்டார போக்குவரத்து சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெற்றுள்ளது. அப்போது கலைக்குழுவினர் எமதர்மன், சித்திரகுப்தன் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிக்குமார், குமாரபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |