இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவித்தது. இதற்கான காலக்கேடு பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியதால் இந்த கால அவகாசத்தை மார்ச் 31 (நாளை) வரை நீட்டித்தது. இந்நிலையில் அவ்வாறு இணைக்கப்படாதவர்களுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் பான்-ஆதார் இணைக்கவில்லையெனில் பான் கார்டு செயல் இழக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.