Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்த யானை…. சேற்றில் மூழ்கி பலி…. வனத்துறையினர் கூறிய தகவல்….!!

தண்ணீர் குடிப்பதற்காக அணைப் பகுதிக்கு வந்த யானை சேற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திலுள்ள பெத்திக்குட்டை, மயில் மொக்கை வனப்பகுதியில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது ஆறு வயதிற்குட்பட்ட பெண் யானை தண்ணீருக்குள் இறந்து  கிடந்துள்ளது.

இந்த தகவலறிந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வன அதிகாரிகள் நேரில் சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். பின்னர்  யானையை  கரைக்கு மீட்டு வந்து  கால்நடை மருத்துவர் தியாகராஜன் யானையின்  உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டு அதன்  உடல் பாகங்களை  ஆய்வு கூடத்திற்கு  அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது வெயில் காலம் என்பதால் வனவிலங்குகள் நீரை தேடி சுற்றி வருவதால் இறந்து கிடந்த யானையும் தண்ணீரை தேடி அணை அருகே இறங்கியபோது சேற்றில் சிக்கி வெளியே வர இயலாமல் இறந்திருக்கலாம் என்று  வனத்துறையினர்  கூறியுள்ளனர். இதை தொடர்ந்து வனத்துறையினர்  பிரேத பரிசோதனை ஆய்வின் முடிவில் தான் யானை  எப்படி இறந்தது என்ற தகவல் கிடைக்குமென்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |