வேன் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள தளிர்மருங்கூர் பகுதியை சேர்ந்த சிலர் வேனில் வேம்புவயல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தளிர்மருங்கூர் தாண்டி சென்று கொண்டிருந்த போது திடீரென வேன் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த வயலில் இறங்கி கவிழ்ந்துள்ளது.
இதனையடுத்து வேன் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த டிரைவர் மற்றும் பெண்கள் வெளியே வந்து விழுந்தனர். ஆனால் அதிஷ்டவசமாக அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் மண் அரிப்பு அதிகம் இருப்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.