Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு…. 2 போலீசார் பலி…பெரும் பரபரப்பு…!!!

இஸ்ரேலில் இரு ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலில், 2 போலீசார் உயிரிழந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டிலுள்ள ஷரோன் மாகாணம் ஹடீரா என்ற நகரில் நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள ஒரு உணவகத்தின் அருகே சில போலீசார் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். அப்போது திடீரென அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களில் சிலரும் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்திய இருவரையும் உணவகம் அருகே நின்று கொண்டிருந்த போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்நிலையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பானது, இந்த இஸ்ரேல் போலீஸார் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இதை அடுத்து இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இருவரும்  இஸ்ரேலில் வசித்துவரும் அரேபியர்கள் என தெரியவந்துள்ளது.மேலும் இந்த தாக்குதலை அய்மென் இங்பரயா மற்றும் இப்ராகிம் இங்பரயா ஆகிய இரு ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |