Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த மகன்…. ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்…. கோவையில் பரபரப்பு சம்பவம்…!!

கணவர் தனது மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பொன்னுதாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதன்குமார், அருண்குமார் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணேசனுக்கும், பொண்ணுதாய்க்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 வாரமாக கணேசன் சரியாக வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கணேசன் வீட்டில் இருந்த அரிவாளால் தனது மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய மதன் குமார் தனது தாய் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |