Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது?…. இன்று மாலை முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்துக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள், எண்ணிக்கை, தேர்வுத் தேதி, விண்ணப்பிக்கும் தேதி உள்ளிட்ட விபரங்கள் அதில் வெளியாகும். குரூப் 4 பதவியில் ஓராண்டு கால அட்டவணைப்படி 5,255 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரமாக உயரலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |