Categories
மாநில செய்திகள்

பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. இன்று முதல் அனுமதி…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை ஒட்டி இன்று(மார்ச் 29) முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, அந்த கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின்படி பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது எனவும் வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதால், வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் இரவு நேரங்களில் பக்தர்கள் மலையில் தங்குவதற்கும்  மற்றும் மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |