Categories
ஆன்மிகம் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் வழிபாட்டு முறை விழாக்கள்

தமிழ்நாட்டின் கோவிலில்…… வருடம் பல கழிந்து…. தமிழுக்கு இடம் அளித்துள்ளனர்

தமிழுக்கு கிடைத்தது அங்கீகாரம்….. 

தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு தமிழ் முறைபடி நடக்கவேண்டும் என ம.தி.மு.க  பொதுச்செயலாளர் வைகோ வலியுத்தியுள்ளார். அவரது அறிக்கையில் 1010-ஆம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் இறுதியாக 1996 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடக்க வேண்டும் என தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புகுழு கோரிக்கை விடுத்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலைத்துறை குடமுழுக்கு பெருவிழாவை தமிழ் முறைப்படி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |