Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எனக்கு கார் வாங்கி தாங்க” பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கணவன் கார் வாங்கி தராததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள பாலக்கரையில் பெலிக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் சரண்யாவுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரண்யா தனது கணவரிடம் புதிதாக கார் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பெலிக்ஸ் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த சரியான தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடல்முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கருகிய நிலையில் கிடந்த சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |