ஏரி அருகே இளைஞரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அல்லேரிமுனியப்பன் கோயில் அருகே உள்ள ஏரியில், இளைஞர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ராசிபுரம் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் விஜயராகவன், காவல் ஆய்வாளர் பாரதிமோகன் ஆகியோர் உடலை ஆய்வு செய்ததில், தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.
பின்னர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ராசிபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.