Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியை ஏமாற்றிய கூலி தொழிலாளி…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மூலப்புதூர் பகுதியில் கூலித் தொழிலாளியான ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |