Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“15 நாட்களுக்குள் நடவடிக்கை” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

சீராக குடிநீர் விநியோகிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அருகே இருக்கும் புங்கார் காலனியில் பசிக்கும்போது மகளுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பவானிசாகர் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்னும் 15 நாட்களுக்குள் சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |