Categories
உலக செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தை மீறும் அஜர்பைஜான்…. குற்றம்சாட்டும் ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, போர்நிறுத்த ஒப்பந்தத்தை அசர்பைஜான் மீறுகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறது.

அஜர்பைஜான் நாட்டிற்கும் அதன் பக்கத்து நாடான அர்மீனியாவிற்கும் இடையே கடந்த 2020 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் போர் நடந்தது. தொடர்ந்து ஆறு வாரங்கள் போர் நடந்த நிலையில், அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் என்னும் மாகாணம்,  அஜர்பைஜானால் கைப்பற்றப்பட்டது.

இந்த போரில், ஆறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகினர். எனவே, ரஷ்யா இதில் தலையிட்டு இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தி வைத்தது. அதன் பிறகு இரு நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ரஷ்யா இருநாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டுவதற்காக தங்கள் படைகள் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியில் அஜர்பைஜான் புகுந்ததாக குற்றம்சாட்டியிருக்கிறது. மேலும், அஜர்பைஜான் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியிருக்கிறது.

Categories

Tech |