Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி: மக்களே எப்ப வேணாலும் வங்கிக்கு போகலாம்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றிருந்தால், இந்த கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், கடன் பெற்றதில் பெரிய அளவிலான முறைகேடு நடந்திருப்பதாக தமிழக அரசுக்கு தெரியவந்தது. எனவே தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் இந்த கடனை தள்ளுபடி செய்யலாம்  என அறிவித்திருந்தது. இதை அடுத்து தகுதி வாய்ந்தவர்கள் பட்டியலானது எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி பேசியுள்ளதாவது, தமிழகத்தில் ஒரே நாளில் பொது கடன் தள்ளுபடி செய்ய ரூ.1000 கோடி விடுவிப்பு செய்திருப்பதாகவும் மற்றும் நகை கடன் ரசீது இம்மாதம் 28ஆம் தேதி வழங்கப்படும் எனவும் கூறினார். சட்டபேரவையில் 2022-2023-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரை வழங்கபட்ட நிலையில், நேரம் இல்லா நேரத்தில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பொது கடன் தள்ளுபடிக்கான தொகையானது, ஒரே நாளில் ரூ.1,000 கோடி  விடுவிப்பு செய்து மக்களுக்கு சேவை செய்திருப்பதாகவும், மேலும் கடந்த மூன்று நாளில் 5 லட்சத்து 48 ஆயிரம் பொது மக்களுக்கு கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீதுகளை வழங்கியிருப்பதாகவும் கூறினார்.

மேலும் வருகிற 31ஆம் தேதிக்குள் மீதமுள்ளவர்களுக்கு ரசீதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வருகிற 28ஆம் தேதியே அனைவருக்கும் ரசீதுகள் வழங்கப்படும் என கூறினார். இந்நிலையில் தகுதியுள்ள நபர்கள் நகைக்கடன் தள்ளுபடி கேட்டு எப்போது வேண்டுமானாலும் கூட்டுறவு வங்கியை அணுகலாம் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். நகைக்கடன் தள்ளுபடியால் ஏழைகள் பயனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |