தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். துபாயின் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஸ்டாலின், பின் அங்கு தமிழ் அரங்கை திறந்து வைத்தார். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பை ஏற்று அவரது ஸ்டூடியோவுக்கு சென்ற ஸ்டாலின், EXPO நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் ரூபாய் 1,600 கோடி முதலீடு செய்ய அமீரக தொழில் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வைட் ஹவுஸ் இண்டகிரேட்டட தையல் தொழிற்சாலை ரூபாய் 500 கோடி முதலீட்டில் தொடங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.