மாநில அளவிலான பயிலரங்கம் ஒன்று உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் உணவு பாதுகாப்பு துறையின் அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிலரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது, உணவு பாதுகாப்பு துறையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என்றும் ,தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உபரி உணவை தொண்டு நிறுவனங்கள் மூலம் விநியோகிப்பதில் 15 ,845 நிகழ்வுகள் உணவு பாதுகாப்பு துறை மூலம் நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னையில் ஒரு மணி நேரத்தில் 15,000 இடங்களில் உணவளிக்க தன்னால் இயலும். ஆனால் அலுவலர்கள் முறையாக செயல்பட்டிருந்தால், லட்சக்கணக்கில் கூட நிகழ்வுகள் நடத்தி கோடிக்கணக்கான நபர்களை பயன் பெற்று இருப்பார்கள் என்று கூறினார். மேலும் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் நுழைய முறையான கட்டணம் செலுத்த கூறி உள்ளனர். அதனால் கோபம் அடைந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, அருகில் உள்ள சிறிய பிரசாத கடைகளில் ரெய்டு நடத்தினார். அதில் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான காலாவதியான பிரசாதம் இருப்பதைக் கண்டுபிடித்து ஊடகங்களுக்கும் செய்தியை கொடுத்துள்ளார்.
அவ்வாறு சிறிய பெட்டி கடைகளில் எப்படி 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் யார் சீல் வைத்தார்கள் என உங்களுக்குத் தெரியும் எனவும் உண்மையாகவே தவறு நடக்கும் இடத்தில் சீல் வைத்து இருந்தால் பாராட்டக்கூடிய விஷயம் ஆகும். இதையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு துறையின் மூலம் 90 டன் குட்கா பறிமுதல் செய்துள்ளதாகவும், காவல்துறையினரால் 400 டன் குட்கா பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே உணவு பாதுகாப்பு துறை மேலும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலரிடம்,அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் தேனி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் எவ்வளவு பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பெறப்பட்டுள்ளது என்றும் உணவு விநியோகத்தில் எவ்வளவு தொண்டு நிறுவனங்களை இணைத்துள்ளீர்கள் என்று ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் தெரியாமல் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி திணறினார்.
உடனடியாக பட்டியல் தயார் செய்து வழங்க அமைச்சர், அவருக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது, உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ,379 திருக்கோவில்களில் தரமான பிரசாதம் வழங்குவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை 491 டன் புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நடவடிக்கை எடுக்கப்பட்ட 9 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 1241 கிலோ லிட்டர் பயன்படுத்தப்பட்ட எண்ணெயானது மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.