Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீடு கட்டுவதற்காக வாங்கிய கடன்…. இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார்கோட்டை வெங்கடேஸ்வரா நகரில் சிவில் இன்ஜினியரான சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |