யானைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் அடிக்கடி சாலையோரங்களில் வருகின்றன. இந்நிலையில் நேற்று காரப்பள்ளம் அருகே 3 யானைகள் சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு யானைகளை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனையடுத்து வன விலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.