Categories
உலக செய்திகள்

“இந்த அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொள்கிறோம்”…. தலீபான்களின் முடிவால்…. ஏமாற்றத்தில் மாணவிகள்….!!

உயர்நிலை கல்விக்கூடங்கள் மாணவிகளுக்காக திறக்கப்படும் என்ற அறிவிப்பை  தலீபான்கள் திரும்ப பெற்று கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் மாணவிகளுக்காக உயர்நிலை கல்விக்கூடங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை  தலீபான்கள் திரும்ப பெற்றுக்கொண்டுள்ளனர். இதனால் உயர்நிலை பள்ளிக்கு செல்ல இருந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் கண்ணீர் சிந்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தலீபான்களின் இந்த செயலுக்கு மனிதநேய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளிகள் திறக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்கவில்லை என்பதால்  ஏமாற்றத்துடன்  வீடு திரும்பி உள்ளனர்.

Categories

Tech |