சிதம்பரம் நகரில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இன்று (மார்ச்.24) முதல் 1 மாத காலத்திற்கு தடை விதித்து வருவாய் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உங்களின் கருத்து என்னவென்று கேள்வி எழுந்துள்ளது.