Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட புதிய ஜெர்சி”….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

மும்பையில் வருகிற 26-ந்தேதி 15-வது  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் முதல் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய வகை
ஜெர்சியானது தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் மூலம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஜெர்சியில் லோகோவுக்கு மேல் 4 முறை கோப்பையை கைப்பற்றியதால் 4 நட்சத்திரங்கள்  பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு மற்றும் மூன்று சக்கர டயர் கொண்ட லோகோ முதன்மை ஸ்பான்சரான TVS Eurogrip யை  குறிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:-
“நம்பகமான, வெற்றிகரமான மற்றும் பாரம்பரிய பிராண்டின் டிவிஎஸ் யூரோ கிரிப் லோகோவை புதிய ஜெர்சியில் வைத்திருப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறது. நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ராணுவத்திடம் எங்கள் கேப்டனுக்கு உள்ள தொடர்பின் அடையாளமாகவும், கடந்த ஆண்டு ஜெர்சியில் ராணுவ சீருடையின் வண்ணத்தை அறிமுகப்படுத்தினோம். தற்போது ஜெர்சியின் பின்புறம் உள்ள காலரிலும் சேர்த்துள்ளோம்” என்று பெருமையுடன் கூறினார்.

Categories

Tech |