Categories
மாநில செய்திகள்

OMG: பேருந்துக்குள் பீர் குடிக்கும்…. அரசு பள்ளி மாணவர்களின் அதிர்ச்சி செயல்…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் பீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குப் பின் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நேரடி வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கான ஆசிரியர்கள் ஆவலுடன் கல்விப் பணியை சீராக மேற்கொள்ள பணிக்கு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்களின் உருவங்களும், உடைகளும் பழக்க வழக்கங்களும் முற்றிலுமாக மாறுபட்டுள்ளது.

இப்போது பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சட்டை பட்டனை கழட்டி விட்டு புள்ளின்கோ ஸ்டைல், முடி ஏதோ சுற்றுலாவுக்கு வந்ததை போல பள்ளி ஆசிரியர்கள் கண்டிக்கவே பயப்படுகின்றனர். ஆசிரியர்கள் கண்டித்ததால் அவர்களைப் பார்த்து முறைப்பது, முனகுவது  மட்டுமின்றி வெளிப்படையாகவே திட்டம் செய்கிறார்கள். இந்நிலையில் மாணவிகள் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று ஓடும் பேருந்துக்குள் பீர் குடிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் பொன் விலை களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் அரசு பேருந்தில் மது அருந்து அட்டகாசம் செய்தத அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரே கவுன்சிலிங் கொடுத்து அவர்களை நல்வழிக்குத் திருப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Categories

Tech |