பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியில் 40 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ் 1 படிக்கும் மகளும் உள்ளனர். இதனையடுத்து மனைவி இறந்தபின் அந்த நபர் மகன், மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு திரும்பி வந்த அந்த நபர் மகளை வலுக்கட்டாயமாக அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி களம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு மாணவியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.