குற்ற செயலில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குருமூர்த்தி மற்றும் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகிய 2 பேர் மீதும் காவல்துறையினர் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் குருமூர்த்தி, பிரேம்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் குருமூர்த்தி,பிரேம்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.