தமிழ்ச் சுவடியியல் மற்றும்பதிப்பியல் ஓராண்டு பட்டயப்படிப்புக்கு ஏப்ரல் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்துகொண்டு நூலாக்கம் செய்யும் அடிப்படையில் ஓராண்டு தமிழ்ச்சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப்படிப்பு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2013ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பட்டயப்படிப்புக்கான விண்ணப்பத்தை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அத்துடன் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டயப் படிப்புக்கான சோ்க்கைக் கட்டணமாக ரூ.3,100 செலுத்த வேண்டும். கல்வித்தகுதி குறைந்தபட்சமாக பத்தாம் வகுப்பு தோ்ச்சி ஆகும். ஆனால் வயதுவரம்பு கிடையாது. இதையடுத்து நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கி வரைவோலையுடன் (Director, International Institute of Tamil Studies எனும் பெயரில் எடுக்க வேண்டும்) நேரிலோ அல்லது தபால் வாயிலகபோ இறுதியாகப் படித்த கல்விச்சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன், வாட்ஸ்அப் எண் குறிப்பிட்டு ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
அதனை தொடர்ந்து மாணவா் சோ்க்கைக்கான எழுத்துத்தோ்வு ஏப்ரல் 13-ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும். பின் வகுப்புகள் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் நேரடியாக நடைபெறும். கூடுதல் விபரங்களுக்கு இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2-ம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113 என்ற முகவரியை நேரிலோ, 044 2254 2992 என்ற தொலைபேசி எண்ணையோ தொடா்புக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.