Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் தீக்குளித்த பெண்…. அதிர்ச்சியில் கணவர்…. போலீஸ் விசாரணை…!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பெருமாள் நகர் இலங்கை அகதிகள் முகாமில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி விமலா ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விமலா ராணி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விமலா ராணியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விமலா ராணி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு விமலா ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |