Categories
உலக செய்திகள்

கார் டிரைவராக மாறிய நிதியமைச்சர்…. தாலிபான்களால் மாறிய வாழ்க்கை…. அமெரிக்கா தான் எல்லாத்துக்கும் காரணமா….?

ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் காலித் பாயெண்டா தற்போது வாடகை கார் ஓட்டுனராக மாறி அமெரிக்காவின் வாஷிண்டன்னில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவின் படை ஆப்கனில் இருந்து விலகியதும்  அங்கிருந்த தாலிபான்கள் அரசு கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றினர். 600 கோடி ரூபாய் அளவுக்கு பட்ஜெட் தாக்கல் செய்து வந்த அவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த காலித் பயெண்டா, “ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் டாக்சி ஓட்டுகிறேன். 150 டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கிறேன்” என்று கூறினார். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு காரணம் அமெரிக்கா என்பதை குற்றச்சாட்டி “அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதால்தான் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்” என தெரிவித்தார். மேலும் அமெரிக்கா அளித்த நம்பிக்கையில் 20 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் ஆனால் அவை அட்டைகளின் மீது கட்டப்பட்ட வீடு போன்று ஒரே நாளில் சரிந்துவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தார்.

Categories

Tech |