Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரயில்வே நிலையத்தில் மயங்கி கிடந்த தொழிலாளி…. மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்…. போலீஸ் விசாரணை…!!

இரயில்வே நிலையத்தில் தொழிலாளி விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே காஞ்சாபுரம் பகுதியில் ஆல்வின்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இந்நிலையில் ஆல்வின் குழித்துறை ரயில்வே நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நாகர்கோவில் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆல்வினை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆல்வின் விஷம் குடித்திருப்பதாக கூறினர். அங்கு ஆல்வினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அனால் சிகிச்சை பலனின்றி ஆல்வின் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடன் பிரச்சனை காரணமாக ஆல்வின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Categories

Tech |