செங்கோட்டை – மதுரை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாகப் கொரோனா பரவல்காரணமாக பொது போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இதன் பின் நாளடைவில் கொரோனா குறைந்ததன் காரணமாக பொது போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னதாக நாள்தோறும் செங்கோட்டை-மதுரை இடையே 3 பயணிகள் ரயில் காலை 7 மணி, 11 மணி, 5 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது.
இதனால் செங்கோட்டை, தென்காசி, கடைய நல்லூர், பாம்பு கோவில்சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன் பெற்று வந்தனர்.இந்த நிலையில் இந்த பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கி பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று ரயில்வே நிர்வாகம் தற்போது படிப்படியாக சேவையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் திருச்சி – மானாமதுரை – திருச்சி, நெல்லை – நாகர்கோவில் – நெல்லை, செங்கோட்டை – மதுரை – செங்கோட்டை ரயில்களுக்கு மீண்டும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ரயில் சேவை எப்போது இயக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. அதேசமயம் தற்போது வெளிவந்த தகவல் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.