Categories
மாநில செய்திகள்

60,000 விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள்…. பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரூபாய் 5 கோடி மதிப்பில் 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |