Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு….  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவிற்கு லாரி மூலமாக 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு தணிக்கை போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அந்த லாரி முழுவதும் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் லாரியிலிருந்து பிடிபட்ட தஞ்சாவூரை சேர்ந்த சுகுமார் மற்றும் முருகன் ஆகியோரை விசாரணை செய்தபோது சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப் பட்டதில் பல உண்மைகள் தெரிய வந்தது. தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து 4 டன் அரிசியையும், கிருஷ்ணகிரியில் இருந்து 7 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கர்நாடகாவிற்கு கடத்தியுள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவிற்கு கடத்தப்பட இருந்த 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ரேஷன் அரிசியை விற்பனை செய்யும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |