2022- 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை (மார்ச் 18) தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மீண்டும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் தாக்கல் நேரடி முறையில் ஒளிபரப்பப்படும். கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் கடந்த வருடம் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோ, அவை இந்த முறையும் கடைபிடிக்கப்படும்.
மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக நாளை மாலை நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 வழங்குவது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகலாம். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் இது ஆகும். கடந்த பட்ஜெட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பட்ஜெட்டில்