Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆபத்தான பயணம்” அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

கூடுதலாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கொட்டையூர் குடியநல்லூர், வேங்கைவாடி, சித்தலூர், பனையங் கால், புக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து மாணவ- மாணவிகள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி முடிந்து மாணவ- மாணவிகள் வீடு திரும்பும்போது ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே இந்த பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே கூடுதல் பேருந்து வசதி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |