மகன் இறந்த துக்கத்தில் மனமுடைந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவில் ஜானகிஅம்மாள்(85) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மகன் இறந்து விட்டதை நினைத்து ஜானகிஅம்மாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்வில் விரக்தியடைந்த மூதாட்டி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜானகிஅம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.