Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியானா மாநிலத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 80 ஆண்டுகளாக நடைபெறும் அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் பணி நிரந்தரம்,  காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டமானது  நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமைவகித்துள்ளார்.  மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி உள்ளனர்.

Categories

Tech |