Categories
மாநில செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு போட்டி… படைப்புகளை அனுப்ப… மார்ச் 31 கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க..!!!!

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிக்கான படைப்புகளை அனுப்ப மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வினாடி-வினா போட்டி, காணொலி காட்சி தயாரித்தல், பாட்டுப்போட்டி, விளம்பர வடிவமைப்பு போட்டி, வாசகம் எழுதுதல் போட்டி போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இவற்றை தயாரித்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான கடைசி தேதி மார்ச் 31ம் இதற்கான விபரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் (ecisveep.nic.in/contest) தெரிந்துகொள்ளலாம். என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

Categories

Tech |